பூமிக்கடியில் ஒளிந்திருந்த மர்ம புதையல்…!! 8-ஆம் வகுப்பு மாணவரின் நேர்மை… உள்ளே இருந்த அம்புட்டும் தங்கம் தான்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்குந்தி கிராமத்தில், பழைய வீட்டை இடித்துவிட்டு அஸ்திவாரம் தோண்டியபோது பூமிக்கடியில் ஒரு செப்புப் பானை கண்டெடுக்கப்பட்டது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் பிரஜ்வல் ரித்தி அந்தப் பானையை மீட்டுப் பார்த்தபோது, உள்ளே ஏராளமான தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதில் வளையல்கள், சங்கிலிகள், மோதிரங்கள் உள்ளிட்ட சுமார் 470 கிராம் எடையுள்ள 22 பழங்கால தங்க ஆபரணங்கள் இருந்தன.

புதையல் கிடைத்த விவரத்தை மறைக்காமல் அந்த மாணவன் நேர்மையுடன் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் தாசில்தார், நகைகளைக் கைப்பற்றி ஆய்வுக்காகத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தச் செப்புப் பானையின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, இவை பல நூற்றாண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரிய புதையலை ஒப்படைத்த மாணவனின் நேர்மையை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

5 minutes ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

8 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

14 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

14 minutes ago

“நான் முதலில் தமிழன்..” பாஜாக-வை உதறிய முதல் நாளே அண்ணாமலை போட்ட வெடி.. அலறும் டெல்லி..!!

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும்…

22 minutes ago

விஜய் போட்ட பலத்த ஸ்கெட்ச்..! பாஜாக-வை எதிர்க்காமல் காங்கிரஸுக்கு சீட் கொடுத்தது ஏன்..? அதிரடி பின்னணி..!!

மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் விட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்…

30 minutes ago