பிக் பாஸ் வெற்றி கோப்பையுடன் முதல் முறையாக அந்த விஜய் டிவி பிரபலத்தை சந்தித்த டைட்டில் வின்னர் அர்ச்சனா… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சி ஜனவரி 14-ஆம் தேதி  நிறைவு பெற்றது. ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர் . இரண்டு வீடுகள் என பிரித்து வைக்கப்பட்ட வீடுகள், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட போட்டியாளர்கள் சண்டை சச்சரவு என சென்ற இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வெல்லப்போவது யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியது.

   

இந்நிலையில் போட்டியின் இறுதியில் விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி என ஐந்து பேர் ஃபைனலிஸ்டாக தேர்வாகியிருந்தனர். முதன்முறையாக பிக் பாஸ் வரலாற்றில் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்த அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார். இந்நிலையில் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

15 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிளாட்டும் மற்றும் 15 லட்சம் மதிப்புள்ள ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வெற்றியை தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய அர்ச்சனா, தற்போது தனது முக்கியமான விஜய் டிவி பிரபலம் ஒருவரை  கோப்பையுடன் சந்தித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை அர்ச்சனாவுக்கு ராஜா ராணி 2 சீரியல் வாய்ப்பை கொடுத்த சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னெட் தான்.

அர்ச்சனா தனது குருவாக நினைக்கும் இயக்குனர் பிரவீன் பென்னெட்-ஐ சந்தித்து அவர் கையில் தனது பிக் பாஸ் கோப்பையை கொடுத்துள்ளார். ‘உங்களுடைய வழிகாட்டுதல் இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் என்றும், என்றென்றும் உங்களுடைய மாணவி நான்’ என கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அர்ச்சனா பதிவு செய்துள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…