சமீப காலமாக திருடர்களும் திருட்டுகளும் அதிகமாய் கொண்டு வருகின்றன. சட்டம் எவ்வளவு தான் கடுமையாய் இருந்தாலும் திருட்டு வேலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’. இங்கு ஒரு திருடன் எப்படி நூதன முறையில் செல்போனை திருடுகிறார் என்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ஆரணி பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் பேப்பரை வைத்து மறைத்து செல்போனை திருடிச் சென்றுள்ள காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள மேல்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு வருகிறார். வேலையை வீட்டிற்கு செல்லும் முன்னர் பேக்கரிக்கு சென்று திவ்யா சில தின்பண்டங்களை வாங்கி அங்கே நின்று சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது சட்டையில் இருந்த தொலைபேசி உத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். பின்னர் அவர் ஒரு பேப்பரை எடுத்து மறைத்துக் கொண்டவாறு அவர் சட்டையில் உள்ள செல்போனை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இது தெரியாமல் திவ்யா உறவினர் ஒருவருக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அவருக்க அழைப்பதற்காக போனை எடுக்க போன் காணவில்லை. அப்பொழுது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது செல்போன் திருடு போயிருந்தது. உடனே அவர் பேக்கரியில் இருப்பவரிடம் கூறவே சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆராய்ந்தனர். பின்னர் போலீசில் இது குறித்து திவ்யா புகார் அளித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர். என்ன ஒரு புத்திசாலித்தனமாய் இந்த திருடன் செல்போனை திருடி உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்….
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…