“பாப்பா என்னை காப்பாத்துங்க…” பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கர்ப்பிணி என்றும் பார்க்காமல் நடந்த கொடூரம்… பாலியல் சித்திராவதை… வைரலாகும் கண்ணீர் வீடியோ…!

By Visaka on ஆடி 27, 2026

Spread the love

ஹாபூர் மாவட்டத்தில் புதிய கனவுகளுடன் புகுந்தகத்திற்குச் சென்ற பெண் ஒருவர், தனது கணவன் மற்றும் குடும்பத்தினரால் கடுமையான கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறி வெளியிட்டுள்ள கண்ணீர்மல்கும் காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகுந்தகத்தார் தன்னைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சுமார் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த தான் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களால் கருக்கலைப்புக்கு ஆளானதாகவும், தனது மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் அந்த வீடியோவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/MandeepRajBhar9/status/2081409022381707486/photo/1

   

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தச் சம்பவத்தின் மூலம், தன் தந்தையிடம் தன்னை மீட்குமாறு அப்பெண் கதறி அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.