மாஸ் கொல மாஸ்…! “சூர்யா 45” படத்தின் தலைப்பு என்ன தெரியுமா..? படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் முன்னணி நடிகர்களில்  ஒருவரான சூர்யா , தற்போது தனது அடுத்த பெரிய படமான ‘சூர்யா 45’ படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இயக்கியுள்ள ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், இது பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது.

   

இதில் லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் ஒரு வழக்கறிஞராகவும் நடிக்கிறார். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ஜூன் 20 ஆம் தேதி, ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளுடன் இணைந்து வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்திற்கு கருப்பு என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.