முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்… எண்ட் கார்டு போட்ட சன் டிவி… வருத்தத்தில் ரசிகர்கள்..!

By Soundarya on கார்த்திகை 17, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் வரை அனைவருமே சீரியல் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாலை ஆகிவிட்டாலே சீரியல் பார்க்க வேண்டும் என்று தான் பெரும்பாலான இல்லத்தரசிகள் இருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு பொழுதுபோக்காகவும் மாறி வருகிறது. இப்படி சீரியல்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து தான் வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் ஓடிக்கொண்டிருந்த சீரியல்களை 7 நாட்களும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கிவிட்டது.

article_image2

   

மற்ற தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு கொஞ்சம் மவுஸ் அதிகம் தான். அதுவும் பிரைம் டைம் குறித்து வைத்து ஒளிபரப்பப்படும். கயல், மருமகள், சிங்க பெண்ணே, சுந்தரி, மூன்று முடிச்சு போன்ற சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் ஐந்தாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

   

article_image3

 

அந்த வகையில் சன் டிவி தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த சீரியல்களில் ஒன்று சுந்தரி. கிராமத்தில் பிறந்து வளரும் ஒரு பெண் ஐஎஸ் அதிகாரியாக மாற போராடுகிறார். அவருடைய வாழ்க்கை கணவரால் சீரழிகிறது . இதோடு முதல் பாகம் கடந்த வருடம் முடிவடைந்த நிலையில் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டது.

article_image4

எதிர்பாராத திருப்பங்களோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் சுந்தரி விஜய் திருமணத்திற்கு கெட்டிமேளம் கொட்டி இந்த சீரியல்களை முடித்துள்ளார்கள் . இதனையடுத்து கிளைமாக்ஸ் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த சீரியல் முடிவடைந்தது ரசிகர்களுக்கு மருத்துவம் என்றாலும் சீக்கிரமாகவே புதிய சீரியல் தொடங்க உள்ளது.