Categories: CINEMA

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் . இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். பிப்ரவரி 2-ம் தேதி அதிகாரபூர்வமாக கட்சி தொடங்கியிருப்பதை அறிவித்திருந்த நடிகர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.

தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் கடந்த வருடம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உதவி தொகையும் சான்றுதல்களும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வருடமும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களை கௌரவப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த முறை நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை கௌரவப்படுத்தி வருகிறார். ஏற்கனவே முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்களை அழைத்து கடந்த 28ஆம் தேதி விருது வழங்கியிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இருக்கும் ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் மீதமுள்ள மாவட்டத்தில் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் பேசியிருந்தது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியிருந்ததாவது” நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காகவே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் என் அம்மாவோட பல நாள் ஆசை. என்ன விட எங்க அம்மா தான் விஜயின் தீவிர ரசிகை. விஜய்யை பார்ப்பதற்காகவே படித்தேன். 25 வருடத்திற்கு முன்பு மெரினாவில் விஜய் கட்டவுட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் விருது வழங்கும் விழாவிற்கு வந்திருக்கின்றேன். இதை விஜய்யிடம் காட்ட விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். மகளும் அம்மாவும் மகிழ்ச்சியாக பேட்டியளித்திருந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

53 நிமிடங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

1 மணி நேரம் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

1 மணி நேரம் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

2 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

2 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

3 மணி நேரங்கள் ago