அடச்சீ… குடிக்காதேனு சொன்னது குத்தமா?… பெற்ற தாயைக் காப்பாற்ற முயன்ற… தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வெறியன் மகன்… ஆந்திரப் பிரதேசத்தில் உலுக்கிய பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 3, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி (62) என்பவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததோடு, மனைவிக்கும் உணவளிக்காமல் அவர் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வந்துள்ளார்.

செங்கரெட்டியின் இந்த தொடர் மதுப் பழக்கமும் பொறுப்பற்ற தன்மையும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, குடிப்பழக்கத்தினால் அவர் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று வீணடித்து விடுவாரோ என்ற பயத்தில் அவரது வயதான தாயும் மனைவியும் சேர்ந்து அவரை மது அருந்த வேண்டாம் என கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.

   

https://twitter.com/Telugufeedsite/status/2095385946032321008/video/1

   

குடும்ப உறுப்பினர்களின் இந்த எச்சரிக்கையும் அறிவுரையும் அந்த நபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டுக்கடங்காத கோபமடைந்த மகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை செங்கரெட்டியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செங்கரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.