“எங்கவந்து யார்கிட்ட மோதுற” இளம்பெண்ணை துரத்தித் துரத்திக் கடிக்க வந்த நாகம்.. கிளைமாக்ஸில் நடந்த மாஸ் டிவிஸ்ட்..!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love
பொதுவாகப் பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒரு பெரிய பாம்பை இளம்பெண் ஒருவர் துணிச்சலுடன் பிடிக்க முயல்கிறார். அந்தப் பாம்பு தப்பிச் செல்லாமல், ஆக்ரோஷமாகப் படமெடுத்து அந்தப் பெண்ணை நோக்கி சீறிப் பாய்கிறது. பாம்பு தன்னை விடாமல் துரத்தித் தாக்க முயன்ற போதிலும், அந்தப் பெண் சற்றும் பயப்படாமல் மிக லாவகமாக அதைக் கையாள்கிறார்.

 

View this post on Instagram

 

   

A post shared by सर्पमित्र तनिष्का शिरसाठ (@wild_girl_05)

இந்த ஆபத்தான போராட்டத்தின் முடிவில், அந்தப் பெண் தனது விடாமுயற்சியால் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து விடுகிறார். எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் அவர் காட்டிய இந்தத் துணிச்சல் சமூக வலைதளங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், முறையான பயிற்சி இல்லாமல் இது போன்ற ஆபத்தான முயற்சியில் ஈடுபடுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.