சிவப்பு நிற சேலையில் தங்கச் சிலை போல ஜொலிக்கும் புன்னகை அரசி..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!!

By Begam

Published on:

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான  சினேகா ‘என்னவளே’  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் .புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

   

புன்னகை தேசம், என்னவளே, ஆனந்தம், ஏய் நீ  ரொம்ப அழகா இருக்க, வசீகரா, நான் அவன் இல்லை, கண்ணாடி என்று இவர்  நடித்த படங்கள் ஏராளம். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் இணைந்து’ அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் நடித்திருந்தனர்.  இருவீட்டாரின்  சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் மிக சிறப்பாக  திரையுலகினர் அனைவரும் பங்கேற்க பிரம்மாண்டமாக நடைபெற்றது.

2015 இவர்களுக்கு விஹான் என்று ஒரு மகன் பிறந்தார்.நடிப்பிற்கு சிறிது இடைவெளி விட்ட இவர் வேலைக்காரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அடுத்த படத்திற்குள் நடிப்பதற்கு மீண்டும் கர்ப்பமாகி விட்டார் . இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட இவர் தற்பொழுது மிகவும் ஸ்லிம் ஆகிவிட்டார் வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் பிஸியாக இருந்தாலும் ,சமூக வலைத்தளங்களிலும் இவர் அழகான இடங்களை புகைப்படங்களை  வெளியிட தவறுவதே இல்லை.

அந்த வகையில் தற்பொழுது சிவப்பு நிற சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.