ஓமன் கடற்பகுதியில் இன்று அதிகாலை ‘விராட் 1’ என்ற வணிகக் கப்பல் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென அதன் இயந்திரம் செயலிழந்தது. இதனால் கப்பலுக்குள் கடல் நீர் வேகமாகப் புகத் தொடங்கி, அது கடலில் மூழ்க ஆரம்பித்தது. ஆபத்தை உணர்ந்த மாலுமிகள் அனைவரும் உடனடியாகக் கப்பலை விட்டு வெளியேறி, கடலில் குதித்தனர்.
‘விராட் 1’ கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதை, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையினர் கவனித்தனர். உடனடியாக உயிர் காக்கும் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 இந்திய மாலுமிகளையும், அங்கு வந்த மற்றொரு சரக்குக் கப்பலின் ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட 14 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதை மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல், அண்மையில் ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ‘எம்.டி செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பலில் இருந்த 3 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
