வேதியியல் புத்தகத்திற்கும் புவிசார் அரசியலுக்கும் இடையிலான ஒரு பொதுவான புள்ளி ‘யுரேனியம்’. 1789-இல் கண்டறியப்பட்ட இந்த உலோகம், அதன் அணு எண் 92 மற்றும் நிலையற்ற உட்கரு காரணமாகத் தனித்துவமானது. தனது நிலைத்தன்மையை அடைய இது உபரி ஆற்றலை வெளியேற்றிக் கொண்டே இருப்பதால் ‘கதிரியக்கத் தன்மை’ கொண்டதாக விளங்குகிறது. தங்கம், வெள்ளியை விட அதிகளவில் மண்ணிலும் நீரிலும் கிடைக்கக்கூடிய யுரேனியத்தைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் ‘யெல்லோ கேக்’ தூளே அணுசக்தியின் அடிப்படை ஆதாரமாகும்.
இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அதிகமிருந்தாலும், அணுப்பிளவு அடையக்கூடிய மிகக்குறைவாகவே இருக்கும். இதன் அளவை அதிகரிப்பதே ‘செறிவூட்டல்’ (Enrichment) எனப்படும். சென்ட்ரிஃப்யூஜ் குழாய்களில் அதிவேகமாகச் சுழற்றும்போது எடை குறைந்த தனியாகப் பிரிக்கப்படுகிறது. அணு உலையில் ஒரு நியூட்ரான் கொண்டு யுரேனியத்தைத் தாக்கும்போது ஏற்படும் ‘செயின் ரியாக்ஷன்’ (Chain Reaction) மூலம் அபரிமிதமான வெப்பம் கிடைக்கிறது. இதை முறையாகக் கட்டுப்படுத்தினால் மின்சாரமாகவும், கட்டுப்படுத்தத் தவறினால் பேரழிவு தரும் அணு ஆயுதமாகவும் மாறுகிறது.
யுரேனியத்தின் செறிவூட்டல் அளவு ஒரு நாட்டின் அதிகாரத்தைத் தீர்மானிக்கிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தவறான கைகளுக்குச் சென்றால் ஆபத்து என்பதால், அதனைச் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தற்போது வடகொரியா தனது யோங்பியோன் நிலையத்தை விரிவுபடுத்தி வருவதும், ஈரான் தனது ஃபோர்டோ போன்ற இடங்களில் 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதும் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 90% செறிவூட்டலை எட்டினால் அது ஆயுதத் தரத்தை அடைந்துவிடும் என்பதே இந்த அச்சத்திற்குக் காரணம்.
யுரேனியம் என்பது ஒரே நேரத்தில் ஒரு வரமாகவும் சாபமாகவும் பார்க்கப்படுகிறது. கார்பன் இல்லாத தூய்மையான ஆற்றலை வழங்கும் அதேவேளையில், மனித நாகரிகத்தையே அழிக்கும் வல்லமையையும் இது கொண்டுள்ளது. இதனால் தான் கஜகஸ்தான் முதல் கனடா வரை, இஸ்லாமாபாத் முதல் வாஷிங்டன் வரை உலக நாடுகள் அனைத்தும் இந்த ஒரு தனிமத்தைச் சுற்றியே தங்களது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைக்கின்றன. அரசியல் மற்றும் அறிவியல் ரீதியாக உலகை இயக்கும் அச்சாணியாக யுரேனியம் இன்றும் நீடிக்கிறது.
