தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்திப் பகுதியில் இன்று மதியம் மூன்று மணி அளவில் தொடங்கி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிக்கவே மாநாடு தொடங்கியது. பின் விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் ஒன்று ஒலிக்கப்பட்டது. உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நான் என்ற பாடல் ஒலித்தது.
இதனைத் தொடர்ந்து தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக தொண்டர்கள் மட்டும் கட்சியினர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கத்தி கூச்சலிட்டு ஆரவாரத்தோடு வரவேற்றனர். ஒரு தொண்டர் மட்டும் பனை மரத்தில் ஏறி கொடியை ஆட்டி தா.வெ.க தலைவர் விஜயை ஆர்வத்தோடு வரவேற்றார்.
