வெங்காயம் வெட்டும்போது கண்களில் கண்ணீர் வருவது ஏன்..? அறிவியல் ரீதியான காரணம் இதோ..!!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

பொதுவாக சமையலறையில் வெங்காயத்தை வெட்டும்போது நம்மளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிவது பொதுவான விஷயம்தான். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது. வெங்காயத்தை வெட்டும்போது நம்முடைய கண்களில் இருக்கும் செல்கள் சேதம் அடைகிறது. இதன் காரணமாக வெங்காயத்தில் உள்ள சல்பர் அடிப்படையிலான நொதிகள் அதிலிருந்து வெளிவந்து அதனோடு ஒட்டி இருக்கும் நொதிகளோடு கலந்துவிடுகிறது. இதன் விளைவாக சின்-ப்ரோபனேத்தியல்-எஸ்-ஆக்சைடு என்ற வேதிப்பொருளானது உருவாகிறது. இந்த வேதிப்பொருளானது காற்றில் கலந்து நம்முடைய கண்களில் அடைந்து எரிச்சல் ஏற்படுகிறது.

இது கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பியை பாதிப்பதன் காரணமாகத்தான் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பிக்கிறது. இந்த வாயு கண்களில் உள்ள மெல்லிய திரவ அடுக்கோடு தொடர்பு கொண்டு லேசான சல்பியூரிக் அமிலத்தை உருவாக்குவதால் கண்கள் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வருகிறது. இதனால் கண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. வெங்காயம் இயற்கையாக வேதியியல் எதிர்வினையின் விளைவால் தான் இதுபோன்று ஏற்படுகிறது. எனவே அடுத்த முறை வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வந்தால் அது உங்களுடைய உடலின் பாதுகாப்பு செயல்பாடு என்றுதான் நினைக்க வேண்டும்.