வீடியோவை பார்த்தாலே வாந்தி வரும்..! பேண்ட்டுக்குள் கை.. அப்புறம் அதே கையால் சமோசா… தெருவோரக் கடையின் அருவருப்பான செயல்..!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அருவருப்பான வீடியோ, தெருவோர உணவகங்களில் உணவு உண்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், சமோசா விற்கும் கடைக்காரர் ஒருவர் செய்த செயல் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.  சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், தெருவோரக் கடை ஒன்றில் ஒருவர் சமோசா விற்றுக்கொண்டிருக்கிறார். அவர் தனது பேண்ட்டிற்குள் கையை விட்டு எதையோ சொறிந்துவிட்டு, அதே கையால் எந்தவித தயக்கமும் இன்றி சமோசாவை எடுத்து வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுகிறார். கைகளைக் கழுவவோ அல்லது சுத்தப்படுத்தவோ அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பற்றி எவ்வித கவலையும் இன்றி அவர் செயல்படுவது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “இதுபோன்ற நபர்களால் தான் நோய்கள் வேகமாகப் பரவுகின்றன” என்றும், “இனி தெருவோரக் கடைகளில் உணவு உண்பதற்கே பயமாக இருக்கிறது” என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

   

   

கல்வி மற்றும் விழிப்புணர்வு இல்லாதது இதுபோன்ற செயல்களுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், அடிப்படை மனிதநேயம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான அக்கறை இன்மை கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறைந்த விலையில் உணவு கிடைக்கிறது என்பதற்காகத் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற இடங்களைத் தேடிச் செல்வது நமது ஆரோக்கியத்திற்கு நாமே வைக்கும் சூனியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.