சினிமாவில் உச்சத்தில் இருந்த அப்பாஸ் காணாமல் போனதற்கு இவர்தான் காரணமா?.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!!

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர் தான் நடிகர் அப்பாஸ். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். சமீபகாலமாக இவர் பல மீடியாக்களில் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி பேட்டி அளித்து வருகின்றார். அதன்படி இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஐந்து திரைப்படங்களின் வாய்ப்பை தவற விட்டுள்ளார். இந்த படங்களில் எல்லாம் நடித்திருந்தால் கட்டாயம் அப்பாஸ் மிகப்பெரிய முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பார்.

   

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் அப்பாஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் படத்திற்காக அவரை அணுகும் போது கால் சூட் இல்லை என்று சொல்லி அவருடைய மேனேஜர் முடித்துவிட்டார். அதனைப் போலவே நடிகர் சாம் ஹீரோவாக அறிமுகமான 12B என்ற படத்தில் முதலில் ஹீரோவாக நடித்த அப்பாஸுக்கு தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்ரீகாந்த் மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இறுதியில் பொதுமுக ஹீரோ வேண்டும் என சொல்லி அப்பாஸை நிராகரித்து விட்டனர்.

அதனைப் போலவே பஞ்சதந்திரம் திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அதுவும் தவற விட்டுள்ளார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அப்பாஸ் தான். ஆனால் அவரை பல குழு அழகிய நிலையில் அவருடைய மேனேஜர் கால் சூட் இல்லை என்று கூறிவிட்டார். இந்த படங்கள் அனைத்தையும் தவறவிட்ட அதற்கு முழு காரணமாக அவருடைய மேனேஜர் இருந்துள்ளார். நல்ல கதைகள் அவரை தேடி வந்த போது கால் சூட் இல்லை என்று கூறி அந்த வாய்ப்புகளை தட்டி விட்டுள்ளார். தற்போது அப்பாஸ் தன்னுடைய மேனேஜர் தனக்கு செய்த துரோகத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

author avatar
Nanthini