Categories: சினிமா

கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வடிவேலுவின் மகள்.. விஜயகாந்த் மீது தீராத கோபத்துக்கு இது தான் காரணமா?

Spread the love

நடிகர் விஜயகாந்த், வடிவேலு மோதல் கடந்த 2010ல் துவங்கியது. படப்பிடிப்பில் டைரக்டர் சொன்ன வசனத்தை மாற்றி பேசினார் வடிவேலு. பலமுறை கேப்டன் சொல்லியும் அதே டயலாக்கை திரும்ப திரும்ப பேசி, படப்பிடிப்பில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த, ஒருகட்டத்தில் வடிவேலுவை ஓங்கி அறைந்திருக்கிறார் கேப்டன். அதுதான் கேப்டன் – வடிவேலு விரிசலுக்கான முதல் காரணம். அடுத்து திமுக ஆதரவாளராக மாறிய வடிவேலு 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து பிரசார மேடைகளில் பேசினார்.

ஆனால் அவரை ஒரு பொருட்டாக, எதிரியாக கருதவில்லை கேப்டன். ஒருமுறை சென்னை விமானநிலையத்தில் கேப்டனும், வடிவேலுவும் நேருக்கு நேர் சந்தித்த நிலையில், என்ன வடிவேலு, நல்லா இருக்கியா என கேப்டன் கேட்க, நல்லா இருக்கேனுங்க கேப்டன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புயல் வேகத்தில் தப்பித்து ஓடியிருக்கிறார் வடிவேலு. ஆனால் விஜயகாந்த் மறைவுக்கு 4 வரி இரங்கல் தெரிவித்து, ரசிகர்களிடம் தனது கவுரவத்தை காப்பாற்ற வடிவேலு மறந்துவிட்டதுதான் இதில் கசப்பான உண்மை.

இதுகுறித்த வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறுகையில், பலமுறை கேப்டனை வடிவேலு தரக்குறைவாக விமர்சித்தும் எந்த இடத்திலும் வடிவேலு குறித்து விஜயகாந்த் தவறாக பேசியது இல்லை. ஒருமுறை, கேப்டனை வடிவேலு இழிவாக பேசியதற்காக கேப்டனின் ஆதரவாளர்களான சிலர், வடிவேலு வீட்டுக்குள் கல் எறிந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதில் வடிவேலுவின் மகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது.

அது பார்த்து பதறிப்போய் கதறி அழுதிருக்கிறார் வடிவேலு. அதுபோன்ற சம்பவங்களால் கேப்டன் மீது வடிவேலு தீராத கோபம் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு போதும் அதுபோன்ற ஒரு தவறான செயலலை செய்பவர் அல்ல கேப்டன். அவருக்கு தெரியாமல் தான் அதுபோன்ற சம்பவம் நடந்திருக்கும். அவர் அப்படிபட்டவர் அல்ல, என்று அதில் கூறியிருக்கிறார் அந்தணன்.

#image_title

Sumathi

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

4 மணி நேரங்கள் ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

4 மணி நேரங்கள் ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

4 மணி நேரங்கள் ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

4 மணி நேரங்கள் ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

4 மணி நேரங்கள் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

5 மணி நேரங்கள் ago