நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து கடந்த 8-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவர்களுடன் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாரிமுத்துவின் மகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அப்பாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர காரணம், பாட்டி மிகவும் வயதானவர். அவர் கண்டிப்பாக அப்பாவை பார்க்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தோம்.

மற்றொன்று அப்பாவின் தந்தை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்த அதே இடத்தில் அப்பாவின் உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இங்கு கொண்டு வந்தோம். அப்பாவால் திரும்பவும் சொந்த ஊருக்கு வர முடியாது. ஆனால் இறுதி காலகட்டத்தில் அவர் சொந்த ஊரில் வந்து இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அடிக்கடி அம்மாவிடம் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவுக்கு ஊர் மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்பது அம்மாவிடம் பேசும்போது தெரியும் என கூறியுள்ளார்.

