ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள “ரத்னம்” திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ளனர்.
“தாமிரபரணி”, “பூஜை” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு ஹரி விஷாலுடன் “ரத்னம்” திரைப்படத்தில் இணைந்துள்ளார். முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் வகையில் ஒரு ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இத்திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே விஷாலும் ஹரியும் பல ஊடகங்களில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இத்திரைப்படத்தின் கதாநாயகியான பிரியா பவானி ஷங்கர் “ரத்னம்” திரைப்படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புரொமோஷனிலும் தலைகாட்டவே இல்லை. இது குறித்து விஷாலிடம் ஒரு முறை கேட்டபோது, “பிரியா பவானி ஷங்கர் வேறு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்” என கூறினார்.
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் இது குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது பிரியா பவானி ஷங்கர் “ரத்னம்” திரைப்படத்தின் புரொமோஷன் விழாக்களுக்கு வருவதற்கு தயாராகவே இருந்தாலும் அவருக்கு முறையான அழைப்பு விடுக்கவே இல்லையாம். ஆதலால்தான் அவர் “ரத்னம்” படத்தின் புரொமோஷன் பணிகளுக்கு வருவதில்லை என கூறியிருக்கிறார்.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கோட்டைகளாகக் கருதப்படும் விருத்தாச்சலம் மற்றும் விருதுநகர் தொகுதிகளில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த அரசியல் களமும் காத்திருக்கிறது.…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…
தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…