ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள “ரத்னம்” திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ளனர்.
“தாமிரபரணி”, “பூஜை” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு ஹரி விஷாலுடன் “ரத்னம்” திரைப்படத்தில் இணைந்துள்ளார். முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் வகையில் ஒரு ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இத்திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே விஷாலும் ஹரியும் பல ஊடகங்களில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இத்திரைப்படத்தின் கதாநாயகியான பிரியா பவானி ஷங்கர் “ரத்னம்” திரைப்படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புரொமோஷனிலும் தலைகாட்டவே இல்லை. இது குறித்து விஷாலிடம் ஒரு முறை கேட்டபோது, “பிரியா பவானி ஷங்கர் வேறு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்” என கூறினார்.
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் இது குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது பிரியா பவானி ஷங்கர் “ரத்னம்” திரைப்படத்தின் புரொமோஷன் விழாக்களுக்கு வருவதற்கு தயாராகவே இருந்தாலும் அவருக்கு முறையான அழைப்பு விடுக்கவே இல்லையாம். ஆதலால்தான் அவர் “ரத்னம்” படத்தின் புரொமோஷன் பணிகளுக்கு வருவதில்லை என கூறியிருக்கிறார்.
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…