BREAKING: Earned Leave-வை பணமாக பெறும் நடைமுறை மீண்டும் அமல்..!!

By Soundarya on தை 3, 2026

Spread the love

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் (Earned Leave Surrender) செய்து பணமாகப் பெறும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.   2025-26 நிதிநிலை அறிக்கையில் இந்தச் சலுகை 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 2025 அக்டோபர் 1 முதல் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பலனடைவார்கள். ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் வரை தங்களது ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.