முன்னாள் மனைவியின் படம் குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு… என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.  தற்பொழுது தனுஷ் தமிழில் தனது 50 வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

   

இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது. தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்தது வாழ்வது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘3 படத்தின் ரீ-ரிலீஸுக்கு கிடைக்கும் வரவேற்பு எமோஷனலாக உள்ளது. இந்த ஏகோபித்த வரவேற்புக்கு கோடான கோடி நன்றி’ என்று அவர் பதிவு செய்துள்ளார். தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘3’ . இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘3’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு புது படங்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் நடிகர் தனுஷ் நன்றி கூறி வெளியிட்ட பதிவானது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.