பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000?… தமிழக மக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… இன்னும் 2 நாட்களில் வெளியாகும் அறிவிப்பு…!

By Nanthini on தை 1, 2026

Spread the love

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும் என்ற பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் 2026 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் தானா, ரொக்க பணம் கிடையாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரி கூறுகையில், 248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு கொள்முதல் செய்வதற்காகத்தான். இதற்காக முன்கூட்டியே பணம் ஒதுக்கி கொடுத்தால்தான் பொருளைப் பெற முடியும். ஆனால் ரொக்க பணம் எவ்வளவு என்பதை நிதித் துறையுடன் முதல்வர் கலந்து பேசி அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது. பணத்தை உடனடியாக பெற்று ரேஷன் கடைகளுக்கு வழங்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். எனவே பொங்கல் பரிசு உடன் ரொக்கம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. 3000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பை இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளதாக தெரிகிறது