அஜித்துடன் ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?.. மொத்தமாக மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்த விடாமுயற்சி டீம்..!!

By Nanthini

Published on:

கோலிவுட்டில் தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் அஜித். இருந்தாலும் இனிமேல் என்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அஜித் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜானுக்கு சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.

   

இதனைத் தொடர்ந்து நேற்று நடிகர் ஆரவ் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதிலிருந்து விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது. அதே சமயம் மீண்டும் அஜித், அர்ஜூன் மற்றும் ஆரவ் ஆகியோர் ஒரு ஹோட்டலில் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது. இப்படி அஜித்துடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டாலே பிரபலமாகி விடுகின்றனர். பிரபலங்களுக்கே இப்படி ஒரு ஆசை இருக்கும் போது அஜித் படத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களும் இதைத்தான் நினைப்பார்கள்.

அப்படி ஒரு ஊழியர் விடாமுயற்சி படபிடிப்பின் போது அஜித்திடம் போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். படத்தின் கெட்டப்பில் இருந்தாலும் சரி என அஜித்தும் சம்மதம் தெரிவிக்க அந்த ஊழியர் ஒரு புகைப்படத்தை எடுத்த நிலையில் அடுத்த நிமிடமே அதனை வாட்ஸ் அப் ப்ரொபைலில் வைத்துள்ளார்.

உடனே அந்த போட்டோ இணையத்தில் லீக் ஆன நிலையில் விடாமுயற்சி படத்தில் கெட்டப்பில் அஜித் இருக்கும் புகைப்படம் எனக் கூறி வெளியானது. இதனைப் பார்த்து படக்குழு கடுப்பாகி அந்த ஊழியரை அழைத்து கண்டித்ததோடு அவரை வேலையில் இருந்து வெளியேற்றி விட்டார்களாம். இது அஜித்துக்கு தெரிந்து நடந்ததா இல்லை தெரியாமல் நடந்ததா என்று தெரியவில்லை.

author avatar
Nanthini