ஆற்றில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தபோது… மீன் என நினைத்து முதலை தூக்கிய நபர்.. அடுத்து நடந்த திகிலூட்டும் வீடியோ வைரல் ..!!

By Soundarya on தை 4, 2026

Spread the love

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கும்போது, மறைந்திருந்த முதலை ஒன்று திடீரென மின்னல் வேகத்தில் அவர் மீது பாய்ந்து தாக்குகிறது.  வீடியோவில், நபர் ஒருவர் ஆற்றின் நடுவில் நின்றபடி தனது முகத்தில் தண்ணீரைத் தெளித்து மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். முன்னால் படகில் அமர்ந்திருக்கும் தனது நண்பர்களுக்குத் தான் செய்வதைக் காட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு, திடீரெனத் தனது கால்களுக்கு அருகில் ஏதோ ஒன்று அசைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதலில் அது பெரிய மீனாக இருக்கும் என்று தவறாகக் கருதிய அவர், ஆர்வத்துடன் தண்ணீருக்குள் கையை விட்டு அந்த உயிரினத்தைப் பிடிக்க முயற்சி செய்கிறார்.

தண்ணீருக்குள் இருந்து அந்த உயிரினத்தை அவர் மேலே தூக்கியபோதுதான், தான் பிடித்திருப்பது மீன் அல்ல, ஒரு முதலை என்பதை உணர்ந்து கடும் அதிர்ச்சியடைகிறார். முதலையைப் பார்த்த மாத்திரத்திலேயே நிலைதடுமாறிய அவர், உடனடியாக அதை மீண்டும் தண்ணீருக்குள் வீசிவிட்டு, உயிருக்குப் பயந்து மின்னல் வேகத்தில் நீந்திச் சென்று தனது நண்பர்களின் படகில் ஏறித் தப்பிக்கிறார். சில நொடிகள் தாமதித்திருந்தாலும் அந்த முதலை அவரைத் தாக்கி உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கும் என்பது பார்ப்போரைக் கதிகலங்கச் செய்கிறது.