தோல்வி பயத்தில் ரூ.3000 அறிவிப்பு… போன வருஷம் ஒரு பைசா கூட கொடுக்கல.. திமுகவை சாடிய அன்புமணி.!!

By Soundarya on தை 4, 2026

Spread the love
திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியைத் தான் தற்போது பொங்கல் பரிசாக  ₹3,000 அரசு அறிவித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையாக ஒரு பைசா கூட வழங்காத திமுக அரசு, தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவே இந்த ₹3,000 தொகையை அறிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இத்தகைய அறிவிப்புகளால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும், வரும் தேர்தலில் திமுகவை மக்கள் நிச்சயம் வீழ்த்துவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகை உயர்வு என்பது தேர்தல் வெற்றிக்கான ஒரு தந்திரம் மட்டுமே என்பது பாமகவின் நிலைப்பாடாக உள்ளது.