புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சசி லீலாவதி திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றார். மக்கள் திலகமாக, அரசியல்வாதியாக, வள்ளலாக அவருக்கு இணை அவரே என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் எம்ஜிஆர். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திய போது எம்ஜிஆர் பற்றி பெருமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரின் பழைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் எம்ஜிஆர்க்கு ஒருவர் மேக்கப் போடுகிறார். போட்டோவை பார்த்த ரசிகர்களுக்கு அவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் தான் எம்ஜிஆருக்கு மேக்கப் போடுகிறார்.
