“மனிதாபிமானம் செத்துவிட்டதா?… மருத்துவச் சான்றிதழைத் தூக்கி எறிந்த அதிகாரி.. டிரிப்ஸ் குழாயுடன் ஆஜரான ஊழியர்… கண்ணீர் மல்க வைக்கும் வைரல் வீடியோ”…!!!

By Muthu Mani on சித்திரை 26, 2026

Spread the love

பீகார் மாநிலம் கட்டிகார் பகுதியில் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலால், நோய்வாய்ப்பட்ட அங்கன்வாடி ஊழியர் ஒருவர் தனது கையில் குளுக்கோஸ் ஏற்றப்படும் ‘டிரிப்ஸ்’ குழாயுடன் அலுவலகத்திற்கு நேரில் ஆஜரான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண், தனது விடுமுறை விண்ணப்பத்திற்கு ஆதாரமாக மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தும், அங்கிருந்த அதிகாரி அதை நம்ப மறுத்து அவரை நேரில் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, வேறு வழியின்றி தனது கணவரின் உதவியுடன், கையில் ஊசி மற்றும் மருந்து குழாய்கள் தொங்கிய நிலையிலேயே தடுமாறியபடி அந்த ஊழியர் அதிகாரி முன் ஆஜரானார். அதிகாரிகளின் இந்தச் சுதாரிப்பற்ற மற்றும் இரக்கமற்ற போக்கை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது நாடு முழுவதும் வைரலாகி பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இந்தச் சம்பவம் பீகாரின் அரசு நிர்வாக அமைப்பில் நிலவும் சகிப்புத்தன்மையற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.