ஒன்றா ரெண்டா… அடுத்தடுத்து சிக்கும் வழக்குகள்…. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி?…. அதிர்ச்சியில் அறிவாலயம்…!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

ஆட்சி கவிழ்ப்புப் பேரம் மற்றும் டாஸ்மாக் முறைகேடு வழக்குகளின் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதன் மூலம், மீண்டும் ஒரு மின்வாரிய மோசடி விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெற்ற முறைகேடு புகாரில் சிவசங்கர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் புதிய மின்வாரிய பணமோசடி வழக்கிலும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்படலாம் என்ற வலுவான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளது.