வாட்ச்மேன் முதல், டிரைவர் வரை… கொடநாடு எஸ்டேட்டில் டக்கு டக்குன்னு உயிர் போனது எப்படி..? மர்மத்தை உடைத்த சசிகலா..!!

Spread the love

சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளர் சுரேஷை ஆதரித்துப் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். செங்கோட்டையனுக்கு நன்றி இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசியதற்குப் பதிலடி கொடுத்த சசிகலா, “கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும்; யாருக்குத் துரோகம் செய்துவிட்டு, நன்றி இல்லாமல் பேசுகிறோம் என்பது அவருக்குத் தெரியவில்லை என்றாலும் தமிழக மக்களுக்குத் தெரியும்” என்று சாடினார். இதுபோன்ற துரோகம் செய்பவர்கள் சட்டசபைக்குச் செல்வது மக்களுக்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே கொடநாடு எஸ்டேட்டில் நடந்த மரணங்கள் குறித்துப் பேசிய சசிகலா, சினிமாவில் நடப்பது போல அடுத்தடுத்து உயிரிழப்புகள் நேரிட்டதைச் சுட்டிக்காட்டினார். 45 ஆண்டுகாலமாகத் தங்களிடம் பணியாற்றிய வாட்ச்மேன் முதல், டிரைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரை மர்மமான முறையில் உயிரிழந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார். மேலே ஒருவன் இருக்கிறான் என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கடவுளிடமிருந்து தப்பிக்க முடியாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தனது சிறைவாசம் குறித்துப் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்குப் பதவியைக் கொடுத்துவிட்டுத் தான் சிறையில் சந்தோஷமாக இருக்கவில்லை என்றும், அந்த இக்கட்டான நிலையிலும் அதிமுக அரசாங்கத்தைக் காப்பாற்றவே முயன்றதாகக் கூறினார். சிறையில் அதிகாரிகள் மூலம் தனக்கு ஏராளமான தொந்தரவுகள் அளிக்கப்பட்டதாகவும், தான் உயிரோடு திரும்பி வந்ததே கடவுள் செயல்தான் என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். கட்சி வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டதாக அவர் தனது உரையில் விளக்கமளித்தார்.

Soundarya

Recent Posts

அவதூறு நபரை சந்தித்தாரா ஸ்டாலின்..? தரம் தாழ்ந்த பதிவுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.. தற்போதைய CM விஜய்யின் மாஸ் நடவடிக்கை..!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…

13 minutes ago

2028-ல் மனிதன் அங்கே போவான்.. 5079-ல் உலகம் அழியும்.. பாபா வாங்காவின் அடுத்தடுத்த பகீர் கணிப்புகள்.. உறைந்து போன உலகம்..!!

உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…

14 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! அம்மா உணவகத்திற்குள் நுழைந்த வீணா காயத்ரி… அங்கு நடந்தது என்ன..?!

புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…

25 minutes ago

திமுகவில் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் நிர்வாகிகள்?…. லிஸ்ட்டில் இருக்கும் டாப் தலைவர்கள்… ஸ்டாலினின் ‘ஆபரேஷன் க்ளீன்-அப்’…!

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…

26 minutes ago

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…

29 minutes ago

BREAKING: திமுக -காங்., கூட்டணி… திடீர் திருப்பம்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…

29 minutes ago