ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், பெண் ஒருவர் நிறம் மற்றும் கூடுதல் வரதட்சணை காரணமாகப் புகுந்த வீட்டினரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கோபிலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், ஆரம்பத்தில் 25 பவுன் நகை மற்றும் 12 லட்ச ரூபாய் வரதட்சணையாக வழங்கப்பட்டது.
ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே கோபிலட்சுமி கருப்பாக இருப்பதாகக் கூறி அவரது கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கத் தொடங்கியுள்ளனர். கருப்பு நிறத்தில் இருப்பதால் ஈடுகட்ட இன்னும் கூடுதல் பணம் வேண்டும் என வற்புறுத்தி அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோபிலட்சுமி, தனக்கு நீதி வேண்டி கணவர் வீட்டின் முன்பே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக் கண்ட அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர், வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். சட்ட ரீதியான நடவடிக்கை மூலம் தனக்குத் தீர்வு கிடைக்கும் என அந்தப் பெண் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…