புதுமைப்பெண் திட்டத்தின் 1000 ரூபாய்…! “என் அம்மாவுக்கு….” மாணவி சொன்னதை கேட்டு கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2025

Spread the love

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ரம்யா என்ற மாணவி கூறியதாவது, நான் நினைக்காத அனைத்தும் என் வாழ்வில் நடந்து வருகிறது. அப்பா கூலி வேலை பார்க்கிறார். அவரால் என்னை உயர்கல்வி படிக்க வைக்க முடியவில்லை. நான் வேலைக்கு சென்று பணம் சேர்த்து வந்தேன். எனது ஆசிரியை அப்பாவை அழைத்து கல்லூரிக்கு பணம் கட்டிக் கொள்ளலாம் எனக் கூறி என்னை கல்லூரிக்கு அனுப்ப கூறினார்.

எனது கல்வி கட்டணத்தை ஆசிரியர் செலுத்தினார். கல்வி சார்ந்த எனது அனைத்து செலவுகளையும் புதுமைப்பெண் திட்டத்தால் கிடைத்த 1000 ரூபாய் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன் என் அம்மா செவித்திறன் குறைபாடு கொண்டவர். அம்மா அப்பாவுக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்கள் கழித்து தான் நான் பிறந்தேன். காது கேட்காத நீ எதுக்கு பெண்ணை படிக்க வைக்கிறாய் என நிறைய பேர் பேசியதை நான் நேரடியாக கேட்டு இருக்கிறேன்.

   

எனக்கு மன வருத்தமாக இருக்கும். 1000 ரூபாயில் மாத மாதம் 100 ரூபாய் மிச்சப்படுத்தி என் அம்மாவுக்கு செவி திறன் கருவி வாங்கி கொடுத்தேன். அதன் மூலம் அம்மா தற்போது கேட்கும் திறனை பெற்றுள்ளார் என மாணவி உருக்கமாக பேசினார். இதனை கேட்டதும் மாணவியின் தாய் தந்தை மட்டுமில்லாமல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரும் கண்ணீர் விட்டு அழுதனர்.