சேலத்தில் வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் முதலீடுகளுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்த வழக்கில் சிவக்குமார் என்பவர் உட்பட 30 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சிவக்குமார், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீனை ரத்து செய்தது. சிவக்குமாரின் நிலங்களை ஏலம் விட்டு பணத்தை மீட்கும் முயற்சிகளுக்கும் அவர் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான வின் ஸ்டார் சிவக்குமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவைச் சேர்ந்த நிதியமைச்சர் செங்கோட்டையனை சிவக்குமார் நேரில் சந்தித்து, இருவரும் பரஸ்பரம் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கழுத்தில் மாட்டியபடி வந்து நூதன முறையில் மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த சந்திப்பின் போது காவல்துறை அதிகாரிகளும் உடன் இருந்ததாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்களை ஒரு “தூய சக்தி” என்று பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்ளும் தவெகவினர், ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் பணத்தைச் சுருட்டிவிட்டு பல ஆண்டுகளாகப் போலீசாருக்குப் பயந்து தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளிக்குக் கட்சியில் உயரிய மரியாதை அளிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்களை ஏமாற்றிய நபருடன் நிதியமைச்சர் நெருக்கமாக இருப்பது தங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…