நள்ளிரவில் திண்ணையில் உறங்கிய 2 பெண்கள்… அதிகாலை 3 மணிக்கு அருப்புக்கோட்டையில் நடந்த அந்த பயங்கரம்…. 60 வயது முதியவர் செய்த பகீர் காரியம்…!

Spread the love

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியில், நள்ளிரவில் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் கொலை முயற்சி வழக்கில் காரியாபட்டி கல்குறிச்சி மணிநகரைச் சேர்ந்த 60 வயதான முத்து என்பவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளரான சாந்தி (42) மற்றும் அவரது உறவினர் ஸ்ரீதேவி (45) ஆகிய இருவருக்கும் முறையே 70% மற்றும் 40% கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவரை இழந்த சாந்தி, கோபாலபுரத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து தனது 17 வயது மகன் மற்றும் 13 வயது மகளை வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று சாந்தியின் வீட்டிற்கு அவரது உறவினரான ஸ்ரீதேவி வந்திருந்த நிலையில், பிள்ளைகள் இருவரும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்க, இரு பெண்களும் வீட்டின் வெளிப்புற திண்ணையில் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அங்கு வந்த முத்து, திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவர் மீதும் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி கொடூரமான முறையில் தீ வைத்துள்ளார். பெண்களின் மரண ஓலத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் அதிரடி விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து, போலீசாரிடம் பல பகீர் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். உயிரிழந்த சாந்தியின் கணவரான பாண்டியராஜின் நண்பர்தான் இந்த முத்து. பாண்டியராஜ் மறைவுக்குப் பிறகு சாந்தியை தன்னுடன் வந்து வாழுமாறு முத்து தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அவரது தவறான கோரிக்கையை சாந்தி முற்றிலும் நிராகரித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த பழிவாங்கும் கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த வழக்கில் மற்றொரு புதிய திருப்பமும் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாலை வீடு திறந்து கிடந்ததாகவும், முத்து கதவு பகுதி வழியாக வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், தீயை பார்த்ததும் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் பத்திரமாக வெளியே ஓடி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த கொடூர சம்பவத்தில் முத்துவுடன் மற்றொரு நபரும் இணைந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அருப்புக்கோட்டை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

26 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

28 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

34 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

43 minutes ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

1 மணத்தியாலம் ago