அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வரவிருக்கும் தேர்தலுக்காக 120 முக்கிய அம்சங்கள் அடங்கிய அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி, பொதுமக்களின் சுமையைக் குறைக்க மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பொருளாதார மேம்பாட்டிற்காக ஆண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து நிதி உதவி வழங்குதல், கல்வித் தரத்தை உயர்த்த தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறத்தல் மற்றும் வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 85% தமிழர்களுக்குப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…