வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

By Soundarya on சித்திரை 22, 2026

Spread the love

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில் விமர்சிக்கும் போக்கு வேதனையளிப்பதாக உள்ளது. அத்தகைய ஒரு சூழலில், ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை (IAF) அதிகாரியும், தற்போதைய வாழ்க்கைப் பயிற்சியாளருமான அஞ்சனி மிஸ்ரா, தன்னை விமர்சித்த பெண்ணுக்கு வழங்கிய அதிரடி பதிலடி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சனி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தாயார் கொடுத்த ஊறுகாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியான ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவின் எளிமையைப் பலரும் பாராட்டிய நிலையில், ஒரு பெண் பயனர் அஞ்சனியின் சட்டையில் சில பொத்தான்கள் திறந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அவருக்குக் கண்ணியம் மற்றும் நாகரிகம் குறித்துப் பாடம் எடுக்க முயன்றார். அஞ்சனியின் ஆடையை ஆபாசமாக விமர்சித்த அந்தப் பெண்ணின் செயல், இணையத்தில் ஒருவிதமான ‘ஒழுக்கக் கட்டுப்பாட்டை’ திணிக்க முயல்வது போல் அமைந்தது.

   

   

இந்தத் தேவையற்ற விமர்சனத்தைக் கண்டு அஞ்சனி மிஸ்ரா மௌனமாக இருக்கவில்லை. “என்னைப்போல தகுதிவாய்ந்த, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ஒருத்தி, இன்ஸ்டாகிராமில் பிரபலமடைவதற்காகத் தன்னை விற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; மலிவான விளம்பரத்தில் எனக்கு விருப்பமும் இல்லை” என்று மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்தார். மேலும், அந்தப் பெண்ணின் கணக்கைத் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் பிரிவின் கீழ் புகாரளித்ததோடு, “உன் அம்மாவுக்கு இதைக் கற்றுக்கொடுக்காதே” என்று ஒற்றை வரியில் அந்தப் பெண்ணின் விமர்சனத்தை முறியடித்தார்.

 

தற்போது வைரலாகி வரும் அஞ்சனியின் இந்த வீடியோவிற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். “பெண்களே பெண்களுக்கு எதிரியாக மாறும் அவலம் மாற வேண்டும்” என்றும், “பிரச்சனை உடையில் இல்லை, பார்க்கும் மனநிலையில்தான் உள்ளது” என்றும் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். ஆணாதிக்கச் சிந்தனைகளை விட, பெண்களே சக பெண்களின் சுதந்திரத்தை ஒழுக்கம் என்ற பெயரில் கட்டுப்படுத்த முயலும் போக்கை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற அஞ்சனியின் துணிச்சலான குரல் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.