கொடூரத்தின் உச்சம்..! இரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 63 வயது மூதாட்டி… மறைந்திருந்து தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்… நெஞ்சை ரணமாக்கும் சம்பவம் …!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில், 63 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரியான்வ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் இந்த மூதாட்டி, தனது மூன்று மகன்களும் வாழ்வாதாரத்திற்காக வெளியூரில் உள்ள நிலையில், இவர் செங்கல் சூளைகளில் வேலை செய்வதால், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு சுமார் 9:30 மணியளவில், அவர் இயற்கை உபாதை கழிக்க ஊர் எல்லைக்குச் சென்றபோது, மறைந்திருந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவரைத் தாக்கி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த தரியான்வ் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதியவர் என்றும் பாராமல் நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஈரான் கடலில் பதற்றம்… இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு?… நடுக்கடலில் ‘யூ-டர்ன்’ போட்ட 4 கப்பல்கள்…. என்ன நடந்தது…?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…

53 seconds ago

“அழிஞ்சு போயிரும் பாத்துக்கோங்க” இதை நான் சொன்னா நம்ப மாட்டாங்க… சீனாக்காரன் சொன்னா நம்புவாங்க… சீமான் காட்டம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…

2 minutes ago

“டிரம்ப் Vs ஈரான்: ‘எங்களை மிரட்ட முடியாது’ – அமெரிக்காவின் அதிரடி பதிலடியால் பதற்றம் உச்சம்… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் காட்டும் ஆக்ரோஷம்…!

மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…

4 minutes ago

எங்க குடும்பம் பிரிஞ்சதுக்கு காரணம் சவுமியாதான்… கூடவே இருந்து என் முதுகில் குத்திட்டாங்க… உண்மையை உடைத்த ராம்தாஸ் மகள்…!!

தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…

6 minutes ago

“இனி எங்க கண்ட்ரோல்”… “ஈரானின் அதிரடி ‘செக்-மேட்’… இனி அனுமதியின்றி ஒரு கப்பல் கூட நுழைய முடியாது… உச்சகட்டப் பதற்றத்தில் வளைகுடா…!

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…

7 minutes ago

யாரும் சொல்லாத உண்மை… தூங்கும் முன் ஒரு கிளாஸ்… காலையில் அதிசயம்… ஆளி விதை நீரை குடித்தால் உடம்பில் நடக்கும் மேஜிக் இதுதான்…!!!

ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…

8 minutes ago