சிறுநீரகக் கற்கள் உருவாவதற்குப் போதிய நீர்ச்சத்து இன்மை, உடல் பருமன் மற்றும் அதிகப்படியான சோடியம் கலந்த உணவுகள் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. செரிமானத்தின் போது உருவாகும் யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆக்சலேட் போன்ற தாதுக்கள் ரத்தத்தில் அதிகரித்து, அவற்றைச் சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாத போது அவை கடினமான கற்களாக மாறுகின்றன. இதனால் முதுகு வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் அதிக சிரமம் ஏற்படுவதுடன், கவனிக்கத் தவறினால் இது அறுவை சிகிச்சையில் முடியவும் வாய்ப்புள்ளது.
இந்தக் கற்களை இயற்கையான முறையில் கரைக்க ‘ரணகள்ளி’ எனப்படும் ‘கட்டிப் போட்டால் குட்டிப் போடும்’ தாவரம் மிகச்சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. காரமும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட இந்த இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. ஐந்து முதல் ஆறு இலைகளைச் சுத்தம் செய்து உப்பு, தேன், தண்ணீர் சேர்த்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து ரணகள்ளி ஜூஸைத் தயார் செய்யலாம். இந்தச் சாற்றை அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 24 நாட்கள் குடித்து வந்தால், கற்கள் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, ரணகள்ளிச் சாறு உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சிறுநீரகத்தைத் தூய்மைப்படுத்தும் ‘டீடாக்ஸ்’ பானமாகவும் செயல்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவைக் குறைப்பதுடன், சிறுநீர் கடுப்பு போன்ற எரிச்சல் சார்ந்த பிரச்சினைகளையும் சரிசெய்கிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் சிறுநீரகச் செல்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாத்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்தச் செடியை மிக எளிதாக வீட்டின் சிறிய தொட்டிகளில் வளர்த்துப் பயனடையலாம்.
View this post on Instagram
