“13 வருஷம் லவ்” எனக்கு இப்படி துரோகம் பண்ணிட்டியேடி… பள்ளிக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்த காதலி… பின்தொடர்ந்து சென்று காதலன் வெறிச்செயல்..!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love
தஞ்சை ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியாராக வேலை செய்து வந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் காவியா என்ற பெண்ணை கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். காவியா அரசுத்தொடக்கப்புள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் காலையில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியை காவியாவை பின்தொடர்ந்து வந்து காதலன் அஜித்குமார் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அதாவது 13 வருடமாக காதலித்து வந்த ஆசிரியை காவியாவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனால் வேதனையடைந்த காதலன் இவ்வாறு செய்துள்ளார். இதையடுத்து அஜித்குமார் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.