“டேய் என்னை விட சொல்லுடா” காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

By Soundarya on தை 11, 2026

Spread the love

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே நிகழ்ந்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது காதலனைச் சந்திப்பதற்காகச் சென்றபோது, அந்த நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் இப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். காதலித்த நபரே இத்தகைய செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட பாகூர் காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களைக் கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான காதலன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.