இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்… வாடகை வீட்டில் அடிக்கடி உல்லாசம்.. திடீரென்று மாயமான காதலியே… சூட்கேசில் அடைத்து.. சினிமாவையே மிஞ்சும் திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூரஜ் குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அகன்ஷா, இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியுள்ளனர். முதலில் நட்பில் தொடங்கிய இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அகன்சாவின் தாயார் தன்னுடைய மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியதில் சூரஜ் குமார், என்னுடன் தான் இருந்தார், பிறகு எங்கு சென்றார் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிரமாக விசாரித்ததில் சூரஜ் குமார் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும் இதனை அகன்சா எதிர்த்து கேள்வி எழுப்பியதும், தொடர்ந்து தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதனால் அகன்சா சூரஜ் குமாரை அந்த உறவை கைவிட்டு தன்னுடன் திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சண்டை வந்துள்ளது. கோபமடைந்த சூரஜ் குமார் தனது காதலி அகண்ஷாவை தலையை பிடித்து சுவரில் அடித்து பிறகு கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு அவர் உடலை ஒரு பெரிய சூட்கேசில் அடைத்து யமுனா நதியில் வீசியதாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.