தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசை லாட்டரி மார்ட்டினின் கும்பல் தான் பின்னால் இருந்து வழிநடத்துகிறது என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அக்கட்சியின் தலைவரான விஜய் வெறும் “பொம்மை” முதலமைச்சராக மட்டுமே உள்ளார் என்றும், உண்மையான முதலமைச்சராக ஆதவ் அர்ஜூனா தான் செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த பின்னணியைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தவெக ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும், கலக்கமும் தற்போது பொதுமக்களிடையே பரவலாக நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், லாட்டரி மார்ட்டின் தரப்புடன் தொடர்புடைய ஆதவ் அர்ஜூனா, மிக விரைவிலேயே ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத்தையும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அதைத் தன்வசப்படுத்திவிடுவார் என்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…
தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…