“ஐயோ தங்கமே என்னை மன்னிச்சிருடா” பள்ளிக்கு சென்ற முதல் நாளே கண்ணீர் விட்ட சிறுமி… மன்னிப்பு கேட்ட பேருந்து ஓட்டுநர்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

பள்ளிக்குச் சென்ற முதல் நாளின் எதிர்பாராத நிகழ்வு ஒன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பள்ளிப் பேருந்திற்காக வாசலில் ஆவலுடன் காத்திருந்த ஒரு சிறுமி, பேருந்து வந்தபோது மகிழ்ச்சியுடன் கையசைத்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் அந்தச் சிறுமியைக் கவனிக்காமல் பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டார். இதனால் மிகுந்த வருத்தமடைந்த அச்சிறுமி, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள். பதறிய தாய் அவளைத் தேற்றி, “அவர் உன்னைப் பார்க்கவில்லை, இதோ திரும்பி வருவார்” என்று சமாதானம் செய்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே நல்லெண்ணத்துடன் பேருந்தை மீண்டும் அதே இடத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்த ஓட்டுநர், தனது கவனக்குறைவிற்காகச் சிறுமியிடமும் அவளது தாயிடமும் நேரில் மன்னிப்புக் கேட்டார். “இனிமேல் இப்படி நடக்காது” என்று அவர் உறுதியளித்தபோது, அந்தத் தாயும் சிறுமியும் நெகிழ்ந்து போயினர். ஒரு குழந்தைக்கும், பொறுப்புள்ள ஓட்டுநருக்கும், தாய்க்கும் இடையேயான இந்த இயல்பான, உணர்வுப்பூர்வமான தருணத்தைப் படம்பிடித்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது.