30 கழுதைப் புலிகளால் சூழப்பட்ட ‘காட்டின் ராஜா’… அடுத்து என்ன நடந்தது என்று பாருங்கள்… வைரலாகும் வீடியோ..!!!

By Rajeshwari on மாசி 26, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், காட்டின் ராஜாவான சிங்கம் ஒன்று சுமார் 30 கழுதைப்புலிகளால் சூழப்பட்டிருக்கும் திகைப்பூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. திறந்தவெளி மைதானம் போன்ற பகுதியில் தனியாக இருக்கும் சிங்கத்தை, கழுதைப்புலிகள் கூட்டம் தங்களின் வினோதமான சத்தத்துடன் சுற்றி வளைத்துத் தாக்க முற்படுகின்றன.

மேலும் பொதுவாக கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடும் குணம் கொண்ட கழுதைப்புலிகள், சிங்கத்தையே அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டாலும், அந்தச் சிங்கம் எவ்விதப் பதற்றமும் இன்றி மிகுந்த தைரியத்துடனும் நிதானத்துடனும் அவற்றைப் எதிர்கொள்கிறது.

   

“>

   

இந்நிலையில் முதலில் சிங்கம் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது போலத் தோன்றினாலும், கழுதைப்புலிகள் நெருங்கி வரும்போது அது தனது விஸ்வரூபத்தை எடுத்துத் திருப்பித் தாக்குகிறது. சிங்கத்தின் ஆக்ரோஷமான கர்ஜனையைக் கண்ட கழுதைப்புலிகள் சிதறி ஓடுகின்றன.

 

இதுபோன்ற “காட்டின் ராஜா என்பது வெறும் கர்ஜனையால் மட்டும் வருவதல்ல, இக்கட்டான சூழலிலும் அசையாது நிற்கும் மனதிடத்தால்தான்” என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சிங்கத்தின் தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் கண்டு வியந்த ஆயிரக்கணக்கான பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது.