பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கெஞ்சினார்” – அணு ஆயுதப் போரை தடுத்ததாக டிரம்ப் கூறும் பகீர் பின்னணி… வைரலாகும் வீடியோ..!!!

By Rajeshwari on மாசி 25, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில் எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

இது குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீடு மட்டும் இல்லையென்றால் சுமார் 35 மில்லியன் மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதே கருத்தை டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

   

மேலும் தற்போது வரை சுமார் 100 முறை அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ள நிலையில், இந்தியத் தரப்பு இதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தப் போர் தவிர காசா போர், இஸ்ரேல்-ஈரான் மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளையும் தான் தீர்த்து வைத்ததாக டிரம்ப் தனது உரையில் பட்டியலிட்டார்.

   

இந்நிலையில் டிரம்பின் இந்தப் பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் சபையிலேயே குறுக்கீடு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், அவர்கள் “மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்” என்று விமர்சித்துள்ளார்.