“இதுதான் சார் வைராக்கியம்” காதலித்து ஓடிப்போன ஜோடி… “7 வருஷமா தங்க நல்ல வீடு இல்ல ” இப்போது போலீஸ் அதிகாரி… மனைவியின் கனவை நனவாக்கிய கணவர்…!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் நெகிழ்ச்சியான காதல் மற்றும் வெற்றிப் பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதி, ஆரம்பக் காலத்தில் வசிக்க இடமும், உண்பதற்கு உணவும் இன்றிப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தனர். இருப்பினும், சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன் மனைவியை ஒரு காவல்துறை அதிகாரியாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கணவர் அவருக்குப் உறுதுணையாக இருந்துள்ளார்.

“நீ பறக்க ஆசைப்படு, உனக்கான இறக்கைகளை நான் தருகிறேன்” என்று தனது மனைவிக்கு அளித்த வாக்கினை அந்தக் கணவர் தற்போது நிறைவேற்றியுள்ளார். கணவரின் ஊக்கத்தாலும், விடாமுயற்சியாலும் அந்தப் பெண் தற்போது பீகார் மாநில காவல்துறை உடல்தகுதித் தேர்வில் (Physical Test) கௌரவமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். சீருடை அணியும் தகுதியைப் பெற்றுள்ள தனது மனைவியின் வெற்றியை அந்த நபர் பெருமையுடன் கொண்டாடி வருகிறார். காதல் திருமணத்திற்குப் பிறகு பல தடைகளைத் தாண்டி, தனது மனைவியின் கனவை நனவாக்கிய இந்தக் கணவரின் செயல் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.