பெங்களூருவில் உணவகம் நடத்தி வந்த நபர் ஒருவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விபரீத முடிவை எடுத்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மனைவி வத்சலாவை, அந்த வேலையிலிருந்து விலகுமாறு கணவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மனைவி சம்மதிக்காததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற கணவர், வத்சலாவை மிகக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த பெண்ணின் கணவரும் அதே இடத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் நடந்த இந்த இரட்டை மரணம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு தான் இதற்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் ரகசியப் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை…
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…
இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…
திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…