தெலுங்கானா மாநிலம் விகாராபாத் அருகே வரதட்சணை கொடுமையால் 20 வயது இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்ட அனுஷா என்ற பெண்ணை, அவரது கணவர் பரமேஷ் கூடுதல் நகை மற்றும் பணம் கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டின் முன் அமர்ந்திருந்த மனைவியை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்துச் சென்ற பரமேஷ், மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த கோரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த அனுஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவன் பரமேஷ் தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. மகளைப் பார்க்க வந்த தாயின் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இளம்பெண்ணின் மரணத்திற்குப் பிறகு பரமேஷ் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…