“ஐயோ காப்பாத்துங்க” கதறிய பிஞ்சு குழந்தைகள்… பள்ளிக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. பெற்றோர்களைக் கதற வைத்த கோர விபத்து..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் இன்று சுமார் 20 பள்ளி மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று, மகாராஜ்கஞ்ச் சாலையில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தின் பிரேக் செயலிழந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சுமார் பன்னிரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்களுள் ஆறு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. விபத்து நடந்த ஹர்சந்த்பூர் பகுதியில் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு, விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறார்கள் இவ்வாறு விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.