தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜாக்பாட்….! ரூ.5,000 தரும் தமிழக அரசு…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on தை 8, 2026

Spread the love

யுபிஎஸ்சி (UPSC) குடிமைப்பணித் தேர்வின் முதன்மை கட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்று ஆளுமைத் தேர்வில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களின் பயணச் செலவுக்காக தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகையை அரசு வழங்குகிறது. இதற்காக நடத்தப்படும் மாதிரி ஆளுமைத் தேர்வுகளில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் இந்த நிதி உதவி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையைப் பெற விரும்பும் தேர்வர்கள், வரும் டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளை அடைய வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் ‘civilservicecoaching.com’ என்ற தளத்தில் பதிவு செய்து, தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.