“மகனே ஆனாலும் விடமாட்டேன்”… தந்தையின் வெறி செயல்… திருச்செங்கோட்டில் அரேங்கேறிய பயங்கரம்… அதிரவைக்கும் பின்னணி… !!

Spread the love

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் தந்தை தனது மகனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள ஆனைமலை கரடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (49), இவர் கட்டிட மேஸ்திரியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவி அலமேலுவின் மகனான குணசேகரனுக்கும் (25) வெள்ளைச்சாமிக்கும் இடையே குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நாட்களாக வாக்குவாதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, இரண்டாவது மனைவி தொடர்பான விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் வெடித்தது. ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி, தான் வைத்திருந்த சுவிஸ் கத்தியால் (சூரிக் கத்தி) தனது மகன் குணசேகரனின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு நகரப் போலீசார், காயமடைந்த குணசேகரனிடம் வாக்குமூலம் பெற்றனர். தீவிர சிகிச்சைக்காக அவர் தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தந்தை வெள்ளைச்சாமியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற மகனையே தந்தை கத்தியால் குத்திய இந்த வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மனைவி விவகாரத்தில் ஏற்பட்ட மோதலே இந்த கொலை முயற்சிக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிறு மனக்கசப்புகள் இத்தகைய விபரீத முடிவுகளுக்கு இட்டுச் செல்வது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

7 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

7 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago